பொதுமக்களுடன் செல்பி: மக்களை கவர்ந்த பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, சமீபத்தில் திடீரென அரசியலில் குதித்துள்ள நிலையில் அவருடைய வரவு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது

உத்தர பிரதேச மாநிலம் கசியாபாத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டோலி சர்மாவை ஆதரித்து நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை பொதுமக்கள் அவரை ஆராவாரத்துடன் மலர் தூவி வரவேற்றனர்.

மேலும் பொதுமக்கள் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் தங்களது செல்போனை கொடுத்தனர். இதற்கு பிரியங்கா காந்தி சற்றும் சளைக்காமல் நூற்றுக்கணக்காணோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதனால் பெரும்பாலான வாக்காளர்களை அவர் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply