பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இன்று முதல் ஹால்டிக்கெட்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளதை அடுத்து மாணவர்கள் தங்களது ஹால்டிக்கெட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு அரிவுறுத்தப்படுகிறது

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தங்களது ஹால்டிக்கெட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply