பொங்கல் விடுமுறையில் சென்னை மக்களுக்கு கிடைத்த 50% தள்ளுபடி!

பொங்கல் விடுமுறையான ஜனவரி 15, 16, 17ஆம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுமுறை நாட்களில் இந்த தள்ளுபடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுக்கு கேப் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே சென்னையில் உள்ள எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் இந்த கேப்-ஐ பயன்படுத்தி காணும் பொங்கலன்று மெரினா செல்பார்கள் செல்லலாம்

50% சலுகை கட்டணம், வசதியான பயணம் என்பதால் காணும் பொங்கல் தினம் உள்பட மூன்று நாட்களிலும் மெட்ரோ ரயிலை பயணிகள் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply