பேருந்துக்குள் தோட்டம் வைத்த பஸ் டிரைவர்

பெங்களூரை சேர்ந்த பேருந்து டிரைவர் ஒருவர் தான் ஓட்டும் பேருந்தில் மண்தொட்டியில் செடிகள் வைத்து அதை பேருந்தின் ஆங்காங்கே வைத்துள்ளார். தினமும் அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியும் வருகிறார்.

இதனை பார்க்கும் பயணிகளுக்கு தாங்களும் தங்களுடைய வீட்டில் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டால் அதுவே தனது வெற்றி என்று அந்த டிரைவர் பெருமையுடன் கூறுகிறார்.

இந்த பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் இதனை ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன், டிரைவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply