பிரபல பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நான் பேராசிரியராக ஆசைப்பட்டேன் என்றும், ஆனால் காலம் என்னை பாடல் ஆசிரியர் ஆக மாற்றி விட்டது என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

கல்லூரிப் பேராசிரியர்கள்
எனக்கு உரமிட்டவர்கள்;
பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.

காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்
பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.

அவர்களைப் பார்த்துப்
பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்;
காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.

ஆசிரியர் குலத்திற்கு
என் கனிந்த கைகூப்பு.

கவியரசு வைரமுத்துவின் இந்த தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply