பேரறிவாளன் நிரந்தர விடுதலையா? அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய தாயார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் சிவி சண்முகம், “பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.