பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்வு: என்ன ஒரு பரிதாபம்
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ கனடா செல்வதற்கான ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வை எழுதிவிட்டு கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தபோது சாலையில் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் கீழே விழுந்ததால் மரணம் அடைந்தார். இவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேனர் கலாச்சாரத்திற்கே முற்றுப்புள்ளி வைத்துள்ளது
இந்த நிலையில் சுபஸ்ரீ எழுதிய ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வில் அவர் முதல் வகுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் வீட்டிற்கு நேற்று வந்த கொரியரில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், கனடாவில் ஸ்காலர்ஷிப்புடன் மேற்படிப்பு தொடர்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் அந்த கொரியர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த கொரியர் கடிதத்தை பார்த்ததும் சுபஸ்ரீ தங்கள் மகளின் கனவு நனவாகியும் அதனை பார்க்க சுபஸ்ரீ இல்லையே என்று கூறி கண்கலங்கியது பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. சுபஸ்ரீ இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் மேல்படிப்பிற்காக கனடா செல்ல தயாராகியிருப்பார்.
Leave a Reply
You must be logged in to post a comment.