பெர்த் டெஸ்ட்: 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும், இந்தியா முதல் இன்னிங்ஸில் 283 ரன்களும் எடுத்துள்ளன. விராத் கோஹ்லி அருமையான சதமடித்தார்.
இந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா சற்றுமுன் வரை 51.4 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்துள்ளது. ஷமி 2விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
தற்போது ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.