shadow

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து தமிழிசை கூறியது என்ன?

இன்று பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு மர்ம நபர் தன்னுடைய காலில் அணிந்திருந்த காலணியை கழட்டி பெரியார் சிலை மீது வீசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பல்வேறு கட்சியின் தொண்டர்கள் அந்த நபரை தாக்க தொடங்கினர். பின்னர் அங்கிருந்த போலீசார் அந்த மர்ம நபரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ரனர்.

இந்த நிலையில் பெரியார் சிலையை அவமதித்தவர் பாஜக தொண்டர் என்று கூறப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியதாவது: பெரியார் சிலை அவமதிப்பிற்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியல் செய்து வருகிறது மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.

Leave a Reply