shadow

பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி: சோனியா காந்தி

திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, அதன் பின் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

கருணாநிதி சிலையை திறந்து வைக்கும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். 60 ஆண்டுகால தமிழக அரசியலை கருணாநிதி அவர்கள் நிர்ணயித்துள்ளார். கருணாநிதியின் சாதனைகளை நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கிறேன்.

13 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே காணாதவர் கருணாநிதி. 2004ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்த நாள் கலைஞருக்கு பெரும் மகிழ்ச்சி தந்த நாள். தமிழுக்கு காங்கிரஸ் அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது தான் கருணாநிதி வாழ்க்கையில் நிறைவான தருணம். தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி. இவ்வாறு சோனியா காந்தி பேசினார்

 

Leave a Reply