பெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்து கொள்ள அறிவுரை

தெலங்கானாவில் பெண் வட்டாட்சியர் விஜயாரெட்டி பணியில் இருக்கும்போது தீ வைத்து கொல்லப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்பிரே வைத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அப்துல்லாபர்மெத் கிராமத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக இருந்தவர் விஜயாரெட்டி என்பவரை கடந்த 4ஆம் தேதி அவரது அலுவலகத்தில் வைத்தே சுரேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்தார். இந்தச் சம்பவத்தில் வட்டாட்சியர் விஜயா உயிரிழந்தார்.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் பெண் வட்டாட்சியர்கள் தங்களுடன் பெப்பர் ஸ்பிரே வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெலங்கானா மாநில துணை ஆட்சியர்கள் சங்கத்தின் தலைவர் வி லச்சி கூறியபோது, ‘வட்டாட்சியர் விஜயாவிற்கு ஏற்பட்ட சம்பவம் மிகவும் எதிர்பாராதவிதமானது. இந்தச் சம்பவத்திற்கு பிறகாவது பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆகவே தான் நாங்கள் தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் பெண் துணை ஆட்சியர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் அவர்களிடம் பாதுகாப்பிற்காக பெப்பர் ஸ்பிரே வைத்து கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply