பெண் குழந்தை பெற்ற மனைவியை முத்தலாக் செய்த கணவர்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பெற்ற மனைவியை அவரது கணவர் முத்தலாக் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உபி மாநிலத்தை செர்ந்த ஜாஃப்ரின் அஞ்சும் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இது அவருக்கு இரண்டாவது பெண் குழந்தை ஆகும். ஜாஃப்ரின் கணவர் இந்த முறை ஆண் குழந்தையை எதிர்பார்த்ததாகவும், ஆனால் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் முத்தலாக் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜாஃப்ரின் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தடை சட்டம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply