shadow

பெண்கள் மது அருந்துவது அச்சம் தருகிறது: மனோகர் பாரிக்கர்

பெண்களும் மது அருந்தத் தொடங்கியுள்ளது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். கோவாவில் இளைஞர் நாடாளுமன்றம் என்ற மாணவர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தாம் பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற காலத்தில், தம்முடன் பயின்ற ஒரு பிரிவினர் போதைக்கு அடிமையாகியிருந்ததாக நினைவு கூர்ந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ல் போதை மருந்து பயன்படுத்திய 170 பேர், தமது உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெண்களும் மது அருந்துவது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர்களின் சகிப்புத் தன்மை குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தாம் அனைத்து பெண்களையும் குறிப்பிடவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.

Leave a Reply