shadow

பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் அவ்வையாரம்மன் கோவில்

7பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் அவ்வையாரம்மன் கோவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

காலை, மாலை என 2 வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கொழுக்கட்டை மற்றும் கூழ் படைத்து வழிபடுவார்கள்.

திருமணம் ஆக வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், நோய், நொடிகள் நீங்க வேண்டியும் பெரும்பாலான பெண்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதங்களில் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவ்வையாரம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்

Leave a Reply