பெண்களுடன் இணைந்து கோலாட்டம் நடனம் ஆடிய ஆளுனர் தமிழிசை
ஐதராபாத்தில் உள்ள ஆளுனர் மாளிகையில் இன்று பெண்கள் நடத்தும் ஒரு விழா நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு முளைப்பாரிகள் வைத்து கோலாட்டம் நடனம் ஆடினர்
இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன், பெண்களுடன் சேர்ந்து கோலாட்டம் ஆடினார். ஒருவாரம் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் தினமும் கவர்னர் தமிழிசை அவர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
பெண்களுடன் தெலுங்கானா கவர்னர் தமிழிசை கோலாட்டம் நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.