shadow

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: கீ.வீரமணி

அனைத்து சாதியினர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்தது போல் பெண்களுக்கும் ஆகம விதிப்படி அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் ‘பெரியாரியல் பயிற்சி பட்டறை’ நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீ.வீரமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, ‘ஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக கூறினார்.

கி.வீரமணியின் கருத்துக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் ஒருசிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு ஆகம விதிப்படி அர்ச்சகர் பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அர்ச்சகர், கீ.வீரமணி, டுவிட்டர், பெண்கள், women, k.veeramani, archagar

Veeramani said Women becomes priesta

Leave a Reply