shadow

பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்: திமுக ஆதரவு

பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் பெட்ரோல், டீசல் இரண்டுமே ரூ.100ஐ தொட்டுவிடும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply