shadow

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஆந்திர முதல்வர் அதிரடி

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வரும் நிலைஇல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில அரசின் வரியை குறைக்க முன்வந்துள்ளதால் பெட்ரோல் விலை ரூ.2 குறையும் என தெரிகிறது.

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ2 குறைப்பு நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வரும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதனால் ஆந்திர மாநில மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவை போலவே அனைத்து மாநில அரசுகளும் வரிகளை குறைக்க முன்வந்தால் ஓரளவுக்கு பொதுமக்களின் சுமை குறையும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர முதல்வரை போல் தமிழக முதல்வரும் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்போம்

Leave a Reply