shadow

பெங்களூர் விமான கண்காட்சியில் மீண்டும் விபத்து: 300 கார்கள் எரிந்து சேதம்

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்த கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டு சுமார் 300 கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த கார்கள் அனைத்தும் விமான கண்காட்சியை பார்க்க வந்த பார்வையாளர்களின் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த கண்காட்சியின் பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பெங்களூர் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை சிலமணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.

Leave a Reply