பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி! விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ் அபாரம்

பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர்களின் அபார ஆட்டத்தில் நேற்றைய போட்டியில் அந்த அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் தனது கணக்கை தொடங்கியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, கெய்லேவின் 99 ரன்களால் 173 ரன்களை எடுத்தது. ஆனால் விராத் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடி பதிலடி கொடுத்ததால் பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய வெற்றி காரணமாக பெங்களூரு அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது. இனிவரும் போட்டிகளிலும் இதேபோல் கவனமாக விளையாடினால் அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது

நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply