புலிகளை மீண்டும் செயல்பட வைக்க முயற்சித்த 2 எம்எல்ஏக்கள் கைது!

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் கடந்த 2009-ம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்பட பலர் அந்த போரில் மாண்டனர்

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கமே அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது உயிருடன் இருக்கும் ஒருசில விடுதலைப்புலிகளை இணைத்து மீண்டும் அந்த இயக்கத்தை செயல்பட வைக்க முயற்சித்த்ததாக மலேசியாவைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இவர்கள் இருவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்ட இரண்டு எம்எல்ஏ களும் மலேசியாவில் உள்ள ஜனநாயக செயல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டின் எம்எல்ஏக்களே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply