shadow

புரோ கபடி 2018: தெலுங்கு டைட்டன்ஸ், மும்பை அணிகள் வெற்றி

கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ், மும்பை அணிகள் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி உபி அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 34-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்னொரு போட்டியில் மும்பை அணி ஹரியானா அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த மும்பை அணி 53-26 என்ற அபார புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று பாட்னா-உபி அணிகளும், ஹரியானா-புனே அணிகளும் மோதவுள்ளன.

Leave a Reply