shadow

புரோ கபடி 2018: தெலுங்கு டைட்டான்ஸ், புனே அணிகள் அபார வெற்றி

2018ஆம் ஆண்டின் புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 2 போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனே அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியை 35-31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைசி நேரத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்கள் ஆடிய ஆக்ரோஷமான ஆட்டமே அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது

இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் புனே அணி ஜெய்ப்பூர் அணி 29-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியாது. இந்த நிலையில் நேற்றைய வெற்றியால் ஏ பிரிவில் புனே அணியும், பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply