shadow

புரோ கபடி 2018: கடைசி நிமிடத்தில் மும்பை த்ரில் வெற்றி

2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் கடந்த 7ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான 36-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 40-39 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணியை கடைசி நிமிடத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 5-வது வெற்றியாகும்.

நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 39-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வென்றது.

இன்றைய ஆட்டங்களில் டெல்லி-உ.பி.யோத்தா (இரவு 8 மணி), பாட்னா-அரியானா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply