தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் புரெவி புயல், கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்த நிலையில் புரெவி புயல், கனமழை காரணமாக இதுவரைஉயிரிழந்துள்ள 7 பேர் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

புரெவி புயல், கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Leave a Reply