புதுவை முதல்வரை காக்கா என விமர்சனம் செய்தாரா ஆளுனர்?
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், ஆளுனரை கண்டித்து கடந்த ஐந்து நாட்களாக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தின் நீட்டிப்பு காரணமாக டெல்லியில் இருந்த கவர்னர் கிரண்பேடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார்.
இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தர்ணா போராட்டம் தொடர்பாக ‘காக்கை தர்ணா’ என்ற பெயரில் புகைப்படங்களுடன் கருத்தை பதிவு செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள தரை விரிப்பில் பூனை ஒன்று உருண்டு புரள்கிறது. இதேபோல் மரக்கிளையில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. இந்த படங்களுடன் தனது கருத்தை கிரண் பேடி பதிவு செய்துள்ளார். அதில், ‘யோகா அனைவருக்கும் பொதுவானது. தர்ணா செய்வதும் யோகாதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக தர்ணா செய்கிறோம் என்பதைப் பொருத்து, அது என்ன ஆசனம் என்பதை கூற முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.