புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அம்மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது

இந்த கோரிக்கையை பரிசீலித்த அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மே 31ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவித்துள்ளார்

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவித்துள்ளார்

இருப்பினும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply