புதுவையில் பாஜகவின் மூன்று உறுப்ப்பினர்கள் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
புதுச்சேரியில் பாஜக-வை சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, பாஜக-வை சேர்ந்த செல்வ கணபதி, சங்கர், சாமிநாதன் ஆகிய மூன்று பெரை சட்டமன்ற உறுப்பினராக நியமித்து அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
அதன்படி, புதுச்சேரிக்கு பாஜக நியமித்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பு கூறியது. மேலும், இந்த நியமனத்தில் புதுச்சேரி அரசு தலையிட வேண்டாம் என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.
முன்னதாக, புதுச்சேரிக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த நியமன உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறியிருந்தது.
தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாஜக-வினருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சாமிநாதன் பேசும் போது, ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது. மீண்டும் துணை நிலை ஆளுநரின் அதிகாரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.