புதுச்சேரியில் வரும் 20 முதல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்
புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து சென்டாக் அமைப்பின் தலைவர் ராகேஷ் சந்திரா கூறியதாவது,
புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20 முதல் தொடங்குகிறது. புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் சேர இதுவரை 9,131 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர இந்தாண்டு மாணவர்கள் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவதாகவும், கடந்தாண்டை விட இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.