shadow

புதுக்கட்சி தொடங்குவாரா அழகிரி?

மு.க. அழகிரி தலைமையில் இன்று சென்னையில் அமைதி பேரணி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பேரணி தொடங்குவதற்கு முன் அழகிரி அவர் கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லாமல், குடும்பத்தாரை சந்திக்காமல் நிகழ்விடத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, மு.க. அழகிரி தன்னை திமுக-வில் இணைத்துக்கொள்ளும் படி ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கடி அளித்து வந்தார். ஆனால் அதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து எந்த அசைவும் தெரியாத நிலையில், கருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்றும், அதில் உண்மையான திமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

அமைதிப்பேரணி முடிந்த பிறகு, மு.க. அழகிரி தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. அது புதிய கட்சி தொடங்குவதாகவும் இருக்கலாம் அல்லது திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வதாகவும் இருக்கலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply