shadow

புதிய கேலக்ஸி கூட்டத்திற்கு ‘சரஸ்வதி’ பெயர் வைத்த விஞ்ஞானிகள்

பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மாபெரும் கேலக்ஸி கூட்டம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அவர்கள் ‘சரஸ்வதி’ என்று பெயரிட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் ஆய்வு மாணவர் ஷிஷிர் சங்க்யாயன் தலைமையிலான விண்வெளி ஆராய்ச்சிக் குழு இந்த புதிய கேலக்ஸி கூட்டத்தைக் கண்டறிந்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கேலக்ஸி கூட்டங்களில் இதுவே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு சார்பில் வெளியிடப்படும் பத்திரிகை ‘சரஸ்வதி’ கேலக்ஸி கூட்டம் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இளம் இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கவனிப்பும் பெற்றிருக்கிறது.

‘சரஸ்வதி’ கேலக்ஸி கூட்டத்தில் எண்ணற்ற கிரகங்கள் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கூட்டமாக்கக் காணப்படுகின்றன. பல ஆயிரம் கோடி சூரியக்குடும்பங்கள் இதில் அடங்கும். பூமிக்கு மிகவும் தொலைவில் அமைந்துள்ள இந்த கேலக்ஸி கூட்டத்தைப் பற்றிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply