பீச்சில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் உயிரிழப்பு: பிளஸ் டூ தேர்வு முடிந்த நாளில் நடந்த சோகம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு முடிவடைந்ததை அடுத்து பள்ளிப்பருவம் முடிவடந்த மாணவர்கள் சுதந்திர பறவையாக திரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவடைந்த சந்தோஷத்தில் கடலூரில் மாணவர்கள் சிலர் சில்வர் பீச் சென்று கடலில் குளித்தனர். அப்போது திடீரென ஒருசில மாணவர்கள் அலையால் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளிவந்துள்ளது. பிளஸ் டூ தேர்வுகள் நிறைவடைந்தத நாளில் கடலில் குளித்த மாணவர்கள் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.