shadow

பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்க ரூ.1000 கட்டணமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன் சான்றிதழ் பெற, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, புதிய கட்டணமாக முறையே ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் இந்த நடைமுறை ஓரிரு தினங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. அதன்படி சான்றிதழ் உள்ளதா என பதிவேட்டை ஆய்வு செய்ய ரூ.100, குறிப்பிட்ட ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுகள் இல்லாத நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளின் பதிவேடுகளை பரிசீலனை செய்ய ரூ.100, பிறப்பு, இறப்பு பதிவிலிருந்து ஒரு சான்றிதழ் வழங்கிட செலுத்த வேண்டிய தொகை ரூ.200 கூடுதல் நகல் பெறுவதற்கு, ஒவ்வொரு நகலுக்கும் கட்டணம் ரூ.200 ரூபாய், பதிவுகள் இல்லை என தெரிவித்து அளிக்கப்படும் சான்றிதழுக்கு கட்டணம் ரூ.100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சான்றிதழும் பெற வேண்டுமானால், ஒருவர் ரூ.1000 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த கட்டண உயர்வால் சான்றிதழ் பெற வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திள்ளனர்.

Leave a Reply