பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்ய அபராதம் செலுத்திய தொழிலதிபர்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது பிறந்த நாளில் 17 கைதிகளை விடுதலை செய்ய தனது சொந்தப் பணத்திலிருந்து அபராதம் கட்டியுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மோதிலால் என்ற தொழிலதிபர் அபராதம் செலுத்தாமல் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் 17 கைதிகளுக்கு ரூபாய் 35 ஆயிரம் பணம் செலுத்தி விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது எனது மகனும் ஒரு வழக்கறிஞர் தான் என்றும் அபராதம் செலுத்தாமல் தண்டனை முடிந்ததும் சிலர் சிறையில் வாடுவது குறித்து கேள்விப்பட்டதாகவும் அதனால் தனது பிறந்த நாளில் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்
மேலும் என்னால் விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் குற்றங்கள் செய்ய மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.