உலக நாடுகள் அதிர்ச்சி

பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் பிரேசில் உள்ளது என்பது தெரிந்ததே

நேற்று உலகில் அதிக நபர்கள் கொரோனாவால் மரணம் அடைந்ததும் பிரேசில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிபரே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Leave a Reply