shadow

பிரியாணியில் பீஸ் இல்லை என்பதால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்!

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கோயம்பேடு பகுதியில் உள்ள உணவகத்தில் நேற்றிரவு ஒரு இளம்பெண் தனது ஆண் நண்பருடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது பிரியாணி சரியில்லை என்றும், பிரியாணியில் பீஸ் இல்லை என்றும் அந்த இளம்பெண் ஆண் நண்பரிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. இதுகுறித்த நடந்த வாக்குவாதம் முற்றியதால் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆண் நண்பரை தேடி வருகின்றனர். பிரியாணியில் பீஸ் இல்லாததால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply