பிரியங்கா காந்தியின் பதவி குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார். பிரியங்கா காந்தியின் திடீர் அரசியல் வரவு வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவை வீழ்த்தவும், காங்கிரஸை தவிர்த்துவிட்டு கூட்டணி அமைத்த அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர்களுக்கு பாடம் புகட்டவும் காங்கிரஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலநது கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கியதன் மூலம் ஒரு குடும்பத்திற்கே முக்கியத்துவம் தருவது தெரிகிறது. எத்தனையோ காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கும்போது பிரியங்கா காந்திக்கு பதவி அளித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.