shadow

பிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு

சமீபத்தில் சோனியா காந்தியிடம் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்ட ராகுல்காந்தி தற்போது தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்துள்ளார். இதற்கான உத்தரவை சற்றுமுன் ராகுல் காந்தி பிறப்பித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பல வருடங்களாக கட்சிக்கு உழைத்து வரும் சீனியர்கள் பலர் இருக்கும் நிலையில் பிரியங்கா காந்திக்கு புதிய பதவி கொடுத்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply