shadow

பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பேராயர் பிஷப் பிராங்கோ அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அவர்மிதான குற்றச்சாட்டு குறித்த வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் பேராயர் பிராங்கோ மீதான பாலியல் புகாரின் முக்கிய சாட்சியாக இருந்த பாதிரியார் குரியகோஸ் என்பவர் திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கேரள கோர்ட்டில் பிராங்கோ மீது இருந்த வழக்கில், நீதிமன்றத்தில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறியவர் பாதிரியார் குரியகோஸ் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply