shadow

பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட ஒருசிலர் மீது அவதூறாக டுவிட்டரில் கிஷோர் கே சுவாமி பதிவு செய்துள்ளதாக திமுக ஐடி விங் புகார் அளித்துள்ளது.

இந்த அடிப்படையில் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்., அவரை 14 நாட்கள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.