பிரதமர் மோடியை புகழ்ந்த காங்கிரஸ் பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

ஏழைகளை மனதில் வைத்து பிரதமர் மோடி மக்கள் நலத்திட்டங்களை நல்லமுறையில் வகுத்து, செயல்படுத்தி வருவதாக கூறிய கேரள காங்கிரஸ் பிரமுகர் அப்துல்லா குட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஃபேஸ்புக்கில் அப்துல்லா குட்டியின் பதிவில் மேலும் பிரதமர் மோடியை புகழ்ந்து பல வாசகங்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைமை இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் எம்.பி.யாக அப்துல்லா குட்டி இருந்தபோதே அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply