shadow

பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டேன்: ராகுல்காந்தி சூளுரை

சமீபத்தில் மூன்று மாநிலங்களில் பதவியேற்ற காங்கிரஸ் முதல் அறிவிப்பாக மூன்று மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் டெல்லியில் இன்று பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி கூறியதாவது:

அனில் அம்பானி உள்பட நாட்டில் உள்ள 15 தொழிலதிபர்கள் தொடர்பான கடன்பாக்கி பற்றி பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்ற தவறி விட்டது.

5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், ஆறே மணி நேரத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்.

இதேபோல், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Leave a Reply