பிரதமர் மோடியை கட்டியணைத்தது ஏன்?
இன்று தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை கல்லூரி மாணவிகளுடன் உரையாடினர் அப்போது அவர் பிரதமர் மோடியை கட்டியணைத்தது ஏன்? என்று ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
அன்றைய பாராளுமன்ற கூட்டத்தின்போது பிரதமர் என்னையும் என் குடும்பத்தையும் திட்டியபடி கடும் கோபத்தில் இருந்தார். ஆனால் எனக்கு அவர் மீது துளியும் கோபமில்லை. அன்பு மூலம்தான் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் பிரதமரை கட்டியணைத்தேன் என்று ராகுல்காந்தி கூறினார்.
மேலும் ஊழல் விவகாரத்தில் பிரதமராக இருந்தாலும் சரி, ராபர்ட் வதேராவாக இருந்தாலும் சரி விசாரணை தேவை என்று கூறிய ராகுல்காந்தி, புல்வாமா தற்கொலைப்படை தாக்குதல் நடக்காமல் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்றும், நாட்டில் பயங்கரவாதத்தைவிட வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சனை என்றும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.