பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் நீக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர்
கடந்த 2017ஆம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கான உணவில் தரம் இல்லை என்று கூறி பரபரப்பை ஏறடுத்தியவர் தேஜ் பகதூர் யாதவ். இதன் காரணமாக இவர் பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவர் தற்போது பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
தன்னை பல கட்சியினர் அழைத்ததாகவும், ஆனால் தான் எந்த கட்சியிலும் சேரவில்லை என்றும், இந்த தொகுதியில் வெற்றி பெறுவது தனது நோக்கம் இல்லை என்றும், மோடி அரசு ராணுவ வீரர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கவே சுயேட்சையாக களமிறங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.