shadow

பிரதமர் பதவியை இழந்த ராஜபக்சேவுக்கு புதிய பதவியளித்த சிறிசேனா

சமீபத்தில் இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்துவிட்டு அந்த பதவியை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா வழங்கினார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனையடுத்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று கொண்டார்

இந்த நிலையில் இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா தற்போது நியமனம் செய்துள்ளார். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்த சம்பந்தனை நீக்கி அதிபர் சிறிசேனா எடுத்துள்ள இந்த நடவடிக்கை இலங்கையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply