shadow

பிரதமர்-ஓபிஎஸ் சந்திப்பில் உள்குத்து உண்டா?

பாரத பிரதமர் நரேந்திரமோடியை இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தாலும் இன்னும் இருவருக்கும் இடையே பனிப்போர் இருப்பதாகவும், இந்த சந்திப்பில் பிரதமரிடம் ஓபிஎஸ் இதுகுறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமரிடம் ஓபிஎஸ் என்ன பேசுகிறார் என்பதை தெரிந்து கொள்ள அமைச்சர் தங்கமணியை ஈபிஎஸ் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் ஓபிஎஸ் பிரதமரின் சந்திப்பின்போது தங்கமணியை அழைத்து செல்லாமல் தனது ஆதரவாளர் மைத்ரேயன் எம்பியை மட்டும் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் நேரடியாக தங்கள் பனிப்போரை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் இருப்பினும் இருவருக்கும் இடையேயான மோதல் வெடிக்க்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது

Leave a Reply