பரபரப்பு தகவல்
பாஜகவையும் மத்திய அரசையும் கடந்த சில வருடங்களாக திமுகவினர் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பிரதமருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஓபிசி இட ஒதுக்கீட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது
சமீபத்தில் முதுகலை மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று திமுக தரப்பில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 100 நாட்களில் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது
இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார் இதுகுறித்த தகவல்களை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.