பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்பேந்திரா மிஸ்ரா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு, அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. மே 31-ஆம் தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ராவின் நியமனத்திற்கும் அமைச்சக நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மோடி அரசிலும், இதே பதவிகளை வகித்த இருவருக்கும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply