பிரச்சார கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்: யோகிக்கு அமித்ஷா அறிவுரை

கொல்கத்தாவில் நடைபெறவிருந்த கூட்டத்தை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரத்து செய்திருந்த நிலையில் திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை ரத்து செய்ய வேண்டாம் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, யோகிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் மீண்டும் யோகி பிரச்சாரத்திற்கு கொல்கத்தா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற அமித்ஷா கலந்து கொண்ட பேரணியில் வன்முறை நிகழ்ந்த நிலையில் இந்த வன்முறைக்கு மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்

Leave a Reply