பிரசவ வலியால் துடித்த மனைவியை ஒரே நிமிடத்தில் சிரிக்க வைத்த கணவர்!

அமெரிக்காவின் ஜார்ஜியா என்ற பகுதியை சேர்ந்த கேர்வர் என்பவரது மனைவி ஜாஸ்மின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரசவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் ஜாஸ்மின் வலியால் துடித்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கணவர் கேர்வர் ஒருசில பதாகைகளுடன் அங்கு வந்து அதில் எழுதப்பட்டிருந்ததை ஒவ்வொன்றாக காட்டினார். முதலில் நன்றாக மூச்சுவிடு என்று எழுதப்பட்ட பதாகையினை அடுத்து இருவரும் காதலித்தது முதல் இனிமையான தருணங்களை குறிப்பிடும் பதாகைகள் அதில் இருந்தன

இந்த பதாகைகளை பார்த்த ஜாஸ்மின், பிரசவ வலியையும் மறந்து தனது மலரும் நினைவுகளில் மூழ்கினார். இதுகுறித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது

Leave a Reply